search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவிளக்கு பூஜை"

    • 49-வது குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவிலில் 49-வது குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடை பெற்றது.

    முன்னதாக குண்டம் திருவிழாவானது கடந்த 7-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் தொடங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

    நேற்று மாலை அக்னி குண்டம் வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 2 அடி அகலம்,45 அடி நீளம் கொண்ட குண்டத்தில் வேப்பமரங்களை போட்டு அக்னி வளர்க்கப்பட்டது.சுமார் 10 மணி நேரம் அக்னி வளர்த்து குண்டம் தயார் செய்யப்பட்டது.

     இன்று காலை 7 மணி முதல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரிகள் மற்றும் நிர்வாகிகள் குண்டத்தில் இறங்கினர். பின்னர் ஓம்சக்தி, பராசக்தி கோஷம் விண்ணதிர கைக்குழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபட்டனர்.

    காலை 8 மணிக்கு அக்னி அபிஷேகம், பொங்கல் வைத்தல், பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. பல்லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஸ்ரீநிவாச பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும்.
    • எட்டு சன்னதிகளிலும் எட்டு மாவிளக்குகள் ஏற்றப்படும்.

    குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டி ஒவ்வொரு இல்லத்திலும் உள்ள பெண்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி மாதவனையும் மகாலட்சுமியையும் வழிபடுவர். ஆனால் ஸ்ரீ மகா லட்சுமியே நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று மாவிளக்கேற்றி மகாவிஷ்ணுவை வழிபடுவதை நீங்கள் எங்காவது பார்த்ததுண்டா?

    சென்னை பெசன்ட் நகர் ஸ்ரீ அஷ்ட லட்சுமி கோவிலில் தான் ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் வரும், 3-வது சனிக்கிழமை அன்று அன்னை மகாலட்சுமி மாவிளக்கேற்றும் சடங்கு நடை பெறுகிறது.

    இவ்வாலயத்தில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் தினசரி பூஜைகள் நடந்து முடிந்த பிறகு சுமார் 9 மணிக்கு மேல் இந்த வழிபாடுகள் தொடங்கும். பகல் 10 மணிக்கு மேல் இங்கு உற்சவ மூர்த்தியாக உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும்.

    அதன் பிறகு இங்குள்ள அஷ்ட லட்சுமிகளின் சன்னதிகளில் ஒரு சன்னதிக்கு ஒரு மாவிளக்கு என்ற விகிதத்தில் எட்டு சன்னதிகளிலும் எட்டு மாவிளக்குகள் ஏற்றப்படும். (இவற்றை ஸ்ரீ மகா லட்சுமியே ஏற்றுவதாக ஐதீகம்) பிறகு அவை அனைத்தும் ஒவ்வொன்றாக உற்சவர் ஸ்ரீ நிவாசப் பெருமாள் முன்பு கொண்டு செல்லப்பட்டு அந்த எட்டு மாவிளக்கின் தீபச் சுடர்களாலும் பெருமானின் முன்பு ஒரு பெரிய அகண்ட தீபம் ஏற்றப்படும்.

    மாலை சுமார் 5 மணியளவில் சஹஸ்ரநாம அகண்ட பாராயணம் பூஜைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடி பகவானை சேவித்தலும் வரிசையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ மகாலட்சுமியே மாவிளக்கேற்றி மாதவனை வழிபடும் இந்த ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பெருமாளின் திவ்ய கருணையை பெறலாம்.

    சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி கோவில் ஆடி தபசு விழா கடந்த 18-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று வணிக வைசிய சமுதாய மண்டகப்படி சார்பில் பூஜைகள் நடந்தன. இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சமுதாய மண்டபத்தில் இருந்து பெண்கள் கலந்து கொண்ட மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. விழாவில் கோவில்பட்டி வணிக வைசிய நடுநிலைப் பள்ளி செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். வணிக வைசிய சங்க பொருளாளர் கருப்பசாமி, துணை செயலாளர்கள் வேல்முருகன், மணிமாறன், நிர்வாக குழு உறுப்பினர் கணேசன், வணிக வைசிய சங்க இளைஞரணி செய லாளர் தங்கமாரியப்பன், நாகராஜ், குன்னிமலைராஜா, பாண்டியராஜன், சங்கர்குமார், மீனாட்சி சுந்தரம், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

    நிகழ்ச்சியில் வணிக வைசிய சங்க தலைவர் பூவலிங்கம், செயலாளர் பழனிக்குமார், நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் ரத்னவேல் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வீரவாஞ்சி நகர் வணிக வைசிய சங்க தலைவர் காளியப்பன், செயலாளர் வைரம், பொருளாளர் ராஜா, கணக்கர் கருப்பசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். முடிவில் முருகேசன் நன்றி கூறினார்.
    ×